Saturday, October 17, 2009

நான் தமிழனா இந்துவா ?

இன்று தீபாவளி. வழக்கமான எண்ணைக்குளியல், புத்தாடை ,கடவுள் வழிபாடுவலைப்பூவில் எனது எழுத்து துவங்குவதால் எனக்கு முக்கியமான நாள்.

நான் இந்து தமிழன் இதழ் நடத்தியபோது எனது அடையாளம் பற்றி இப்படிஒவ்வொரு இதழிலும் இப்படி வரும் ,

" நான் இந்தியன் . தமிழ் இந்தியன் . இந்துதமிழன் . எல்லா இந்தியரும் எனது இனம். எல்லா இந்திய சாதியினரும் எனது உறவினர் . அனைத்து இந்தியமொழிகளையும் நான் நேசிக்கிறேன் . எனது தாய் மொழியான தமிழை பேணிவளர்ப்பதிலும் தமிழ் மரபுகளை கட்டி காப்பதிலும் எனக்குள்ள கடமையைநிறைவேற்றுவேன். இறைவனை நான் நம்புகிறேன் . அனைவருக்கும் சமநீதிகிடைக்க பாடுபடுவேன். இந்திய நாட்டில் வாழும் அனைவரும் எப்படி இந்தியரோஅப்படியே தமிழ்நாட்டில் வாழும் அனைவரும் தமிழரே. இந்த நாட்டின் பண்பாடு, பாரம்பரியம் , கலாச்சாரத்தை மதிக்கும் அனைவரும் அவர்கள் சகோதரகிறித்தவராக , இஸ்லாமியராக , பார்சிகளாக , இருந்தாலும் எனது பார்வையில்இந்துக்களே. எனவே நான் இந்து என்பதிலும் இந்தியன என்பதிலும் பெருமிதம்கொள்கிறேன். "

இந்த அடையாள உணர்வை நான்காம் ஈழப்போர் புரட்டிப் போட்டுவிட்டது.

இப்போது எனது அடையாளத்தை மறு பரிசீலனை செய்யும் மனநிலை எனக்குவந்து விட்டது.
இலங்கை வேறு நாடு என்பதை நான் அறிவேன். அதற்காக அங்கே வாழும்தமிழர்கள் கொன்று ஒழிக்கபடுவதை மனிதாபிமானமற்ற முறையில் சும்மாபார்த்துக்கொண்டு கதரலாமே தவிர சத்தம் போடக்கூடாது என்பதைஏற்றுக்கொள்ள முடியாது.
சத்தம் போடக்கூட இந்தியம் குறுக்கே நிற்கிறதா ?
நான் தமிழன் என்ற உண்மையை இந்தியம் மறுக்கிறதா ?
தமிழனாக இருந்தால் இந்துவாக இருக்க முடியாது இந்துவாக இருந்தால்தமிழனாக இருக்க முடியாது என்று நான் இந்து தமிழன் இதழ் தொடங்கியபோதுசொன்னார்கள் .
நான் மறுத்து வந்தேன். இலங்கையில் பெரும்பான்மை தமிழர்கள் இந்துக்களாகஇருந்தும் அவர்கள் பௌத்தர்களால் சிங்களர்களால் கொல்லப்பட்டுஅழிக்கப்பட்டு வருவதை இந்திய பெரும்பான்மை இந்துக்கள் மௌனமாக எந்தசலனமுமின்றி வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறார்களே அப்போதுதான்ஒரு உண்மை புரிந்தது.
இந்துவாக இருந்தாலும் அவன் தமிழனாக இருந்தால் உணர்ந்தால் பிற இந்துக்கள்அவர்களை அங்கீகரிக்க மாட்டர்கள்.
அதிலும் குறிப்பாக நான் பெரிதும் மதிக்கும் ஆர் எஸ் எஸ் தலைவர்கள்சொல்லிவிட்டார்கள். இலங்கையில் தமிழர்கள் தோற்றது அவர்கள் தங்களைஇந்துக்கள் என்று சொல்லிக்கொள்ளாமல் போனதால்தான் என்று.
அதாவது அப்படி சொல்லியிருந்தால் இந்தியாவின் பிற இந்துக்கள் உதவிக்கு ஓடிவந்திருப்பார்களாம். தங்களை தமிழர்கள் என்று சொல்லிகொண்டதால் அவர்கள்வரவில்லையாம். அதாவது அவர்கள் இந்து நம்பிக்கைகளைகொண்டிருந்தாலும்கூட.

உண்மை என்ன.? தமிழனில் இந்து அடக்கமா? இந்துவில் தமிழன் அடக்கமா?
தமிழ் பேசுவதால் மட்டுமா தமிழன். அவனது ஆன்மிக கொள்கை அந்த சொல்லில்அடங்கியிருக்கிறதே. ஆம் . ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதே தமிழனின்ஆன்மிக கொள்கை. எனவே தமிழன் என்றாலே அவன் இந்து என்ற சொல்குறிக்கும் அத்தனை ஆன்மிக நம்பிக்கைகளை கொண்டிருக்கிறவன் என்றுதான்பொருள். திருவள்ளுவரும் திருமூலரும் வள்ளலாரும்தான் தமிழர்களுக்குஆன்மிக குருமார்கள். தமிழர்களில் கிறுத்துவர்களும் இஸ்லாமியர்களும்இருக்கிறார்களே? இருந்தால் என்ன? ஒளியிலும், கல்லிலும் , இயற்கையிலும்உணர்விலும் இறைவனைக்காணும் தமிழர்கள் ஏசுவிலும் அல்லாவிலும் கண்டுவிட்டு போகட்டுமே. எனவே தமிழன் என்ற சொல்லில் இந்து அடக்கம்..

ஆனால் இந்து என்ற சொல்லில் தமிழன் அடங்க மாட்டான். அதாவது இந்து என்றசொல்லுக்கு குறுகிய பொருள் சொன்னால். உண்மையில் இந்து என்றசொல்லுக்கு பரந்த பொருள் உண்டு. உச்ச நீதி மன்ற தீர்ப்பில் கூட இந்து என்றால்அது ஒரு வாழ்க்கை முறை என்றே பொருள் சொன்னார்கள். அது ஒரு மதமல்லஎன்பதுதான் உண்மை. அதனால்தான் இந்து என்றாலும் தமிழன் என்றாலும் ஒரேபொருள்தான் என்றுதான் நான் இந்து தமிழன் என்று என் மாத
இதழுக்கு பெயர் வைத்தேன். ஆனால் நடைமுறையில் சநாதன தர்மம்தான்
நால்வருண நம்பிக்கைதான் பிராமநீயம்தன் இந்துத்துவம் என்று பொருள்கொள்ள தொடங்கிவிட்டார்கள். இந்துத்துவ பதாகையை தூக்கிகொண்டிருக்கிறஅத்தனை பேரும் அந்த பொருளில்தான் இன்று அந்த சொல்லைகையாளுகிறார்கள்.
எனவேதான் இந்து என்ற சொல்லில் தமிழன் அடங்க மாட்டான் என்றுசொன்னேன்.
நான் தமிழன் என்று சொன்னாலே போதும். எல்லா நம்பிக்கையையும் அதுஉள்ளடக்கும். மனிதம் நாத்திகம் சனாதனம் கிருத்துவம் இஸ்லாம் என்றுஅனைத்தையும். தனியே சொல்லிக்கொள்ள அவசியமில்லை. சொல்லிகொள்வது அவரவர் விருப்பம்.
நான் தமிழனே என்று சொல்லும்போது இந்து இல்லை என்று மறுக்கவும்அவசியமில்லை. மறுப்பதாகவும் பொருளில்லை.

தமிழ் என்ன மொழிதானே ? அதற்குமேல் என்ன இருக்கிறது என்று கேட்பவர்கள்தமிழை தாய் மொழியாக கொண்டிராதவர் களாகத்தான் இருப்பார்கள்.
அவர்களுக்கு தமிழனின் குணமும் தமிழின் பொருளும் தெரிய வாய்ப்பில்லை. தவறுமில்லை.

ஈழம் தந்த பாடத்தால் சொல்கிறேன் , இந்தியம் செய்த துரோகத்தால்சொல்கிறேன். இந்துக்கள் காட்டிய பாராமுகத்தால் சொல்கிறேன் .

நான் தமிழனே , தமிழனே, தமிழனே.




.

No comments:

Post a Comment