Saturday, October 2, 2010

thanmana bhakthar peravai

தன்மான பக்தர் பேரவை
ஏசுவின் போதனைகளை ஏற்றுக் கொண்டால் கிறிஸ்தவராக இருக்க வேண்டுமா?
நபிகள் நாயகத்தின் வழி காட்டுதலில் குரான் சொல்லும் கருத்துக்களில் தேர்ந்தெடுத்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றால் கூட ஒருவன்  முஸ்லிம்  ஆக வேண்டுமா?
இன்னும் பெரும்பாலான மதங்களில் அதன் சாரத்தை ஏற்றுக்கொள்வதற்கு கூட  அதனை பின் பற்றுபவராக  அடையாள  படுத்திக் கொள்கிறவராக இருக்க வேண்டும் என்பது மரபாகி விட்டது. இது சரியா?
மதத்தோடு அடையாள படுத்திகொள்கிறவர்கள் தங்களின் தன்மானம் பற்றி கவலைப் படாதவர்கள் .
எனது கேள்வியெல்லாம் கடவுள் நம்பிக்கைக்கும் கடவுளின் பேரால் நிறுவனமாக்கப் பட்டிருக்கும் மதங்களுக்கும் என்ன தொடர்பு என்பதுதான்.?
எல்லா வழிபாடு முறைகளையும் ஏற்றுக்கொள்ளும் இந்தியாவில் உருவான பல்வேறு வகை சமயங்களும் தங்களை அடையாளப் படுத்திக்கொள்ள ' இந்து' என்ற சொல்லை பயன்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி நிற்கின்றன.
ஆனால் இந்த சமய நிறுவனங்களில் பக்தனின் தன்மானம் விலை பேசப் படுகிறதே என்று எந்த பக்தனும் கவலைப் படுவதில்லையே ஏன்?
பெயர் வைப்பதில் தொடங்குகிறது அடிமைத்தனம்.
நான் கிறிஸ்தவன் , முஸ்லிம், இந்து, சீக்கியர், என்று பெயரிலேயே காட்டிவிடுகிறோம்.
கடவுள் நம்பிக்கையை பெயரில் காட்டக்கூடாது என்று சர்வதேச மரபு இருக்குமானால் மத வெறுப்பு மறைந்தே போகும்.
எல்லா மதங்களுமே நல்லதைத்தான் சொல்கின்றன என்ற உண்மை வெளிப்படும்.
மக்களை இறைவனுக்கு அருகில் கொண்டு செல்ல துடிக்கும் மதங்கள் தான் உலகில் பெரும்பாலான பிரச்சினை களுக்கு காரணமாக இருக்கின்றன.
சரி. மற்றவர்கள் இருக்கட்டும். தமிழ் நாட்டில் பக்தர்கள் எப்படி நடந்து
கொள்கிறார்கள்.அனைத்து தரப்பினரும் அர்ச்சகர் ஆக வேண்டும் என்று
சட்டம் கொண்டு வரப்பட்டது . அரசு அர்ச்சகர் பயிற்சி பள்ளிகளை தொடங்கி
எல்லா சாதிக்காரர்களையும் உள்ளடக்கி இரு நூற்று மாணவர்களுக்கு பயிற்சி
கொடுத்தது.  இவர்கள் தொட்டால் சாமி ஓடிவிடும் என்று சொல்லி பிராமணர்கள்
உச்ச நீதி மன்றம் சென்று தடை வாங்கினார்கள். வேலை கொடுக்க முடியாததால்
அரசு அர்ச்சகர் பயிற்சி பள்ளிகளை மூடிவிட்டது.
தங்கள் சாதி பயிற்சி பெற்ற அர்ச்சகர்களை பணியில் நியமிக்க விடாமல்
சதி செய்யும் உயர்ந்த சாதி அர்ச்சகர்கள் மேல் ஏன் பக்தர்களுக்கு கோபம் வர வில்லை.?    அதாவது தங்கள் சாதி அர்ச்சகர்கள் பூசை செய்தால் நாங்கள் வர மாட்டோம் என்று பிற சாதியினர் சொல்லுகிறர்களா?  அப்படி சொல்லித்தான் உச்ச
நீதி மன்றத்தில் தடை வாங்கியிருக்கிறார்கள்.
எதைப் பற்றியும் கவலைப் படாத பக்தர்கள் இருக்கும் வரை எந்த சீர்திருத்தத்தை அமுல் படுத்த முடியும்?
உச்ச நீதிமன்ற  தடையாணையை நீக்க தமிழ் நாட்டு அரசு முயற்சி
எடுப்பதற்குள் அடுத்த தேர்தல் வந்து விடும்.  அரசு கொண்டு வந்த நல்ல
சட்டத்தை அமுல் படுத்த முடியாமல் தடுக்கும் சதிகாரர்களுக்கு எதிராக
பக்தர்கள் நடவடிக்கை எடுத்திருந்தால் தடையும் நீக்கப்ப் பட்டிருக்கும்.
தமிழும் தமிழர்களும் கருவறைக்குள் நுழைந்திருப்பார்கள்.
இப்போது சொல்லுங்கள் . பக்தர்களுக்கு தன்மானம் இருக்கிறதா?
இருந்திருந்தால் சட்டத்தை எதிர்ப்போரிடம்  அர்ச்சனை செய்யும் படி
கேட்கமாட்டோம் என்று முடிவெடுதிருப்பார்கள்.
இறைவனை மட்டும் தரிசித்து விட்டு அர்ச்சகர்களை இவர்கள்
தவிர்த்திருப்பார்கள்.
எனக்குத் தெரிந்து பல மாவட்டங்களில் முன்பு சுயமரியாதை
திருமணங்கள் செய்தவைகள் கூட இப்போது வைதீக திருமணம் செய்கிறார்கள்.
ஏன் தெரியுமா?     இப்போதெல்லாம்  புரோகிதர்கள் தமிழிலேயே திருமண
மந்திரங்களை சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.   புரியாத மொழியில்
சொல்லி மக்கள் புறக்கணிக்க தொடங்கியதன் விளைவு இப்போது
தமிழில் சொல்ல ஆரம்பிக்கிறார்கள்.   அதேபோல்  கோயிலிலும் தமிழில்
அர்ச்சனை சொல்லாத அர்ச்சகர்களை பக்தர்கள் புறக்கணிக்க வேண்டும்.
அப்போது மட்டும்தான் அவர்களுக்கு உரைக்கும்.  
நம்பிக்கையின் பேரால் அடிமைத்தனத்தை வளர்க்க வேண்டாம்.

No comments:

Post a Comment